Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Rowdy Kathirvel

ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலி என்கவுண்டரில் தீர்த்துக்கட்டிவிட்டு, மாவட்டக் காவல்துறையினர் என்கவுண்டர் நாடகத்தை திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி கதிர் என்கிற கதிர்வேலை, சேலம் மாவட்ட காவல்துறையினர் மே 2ம் தேதி காலை 11 மணியளவில் எதிர்மோதலில் (என்கவுண்டர்) சுட்டுக்கொன்றது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான தனிப்படையினர் இ ந்த ஆபரேஷனை செய்து முடித்துள்ளனர்.   ஆய்வாளர் சுப்ரமணியின் கைத்துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த ஒரே ஒரு தோட்டா கதிர்வேலின் மார்பை துளைத்து, மரணத்தை விளைவித்திருக்கிறது. கதிர்வேல், மூன்று கொலை, 9 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைப்பறவையாக இருந்திருக்கிறார். என்கவுண்டரை தொடர்