Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: question paper leak

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது!

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது!

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து அந்தப்பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இதில் பிளஸ்2 பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் ஆகிய பாடத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியானதாக புகார்கள் எழுந்தன. சிபிஎஸ்ஐ நிர்வாகத்தைக் கண்டித்து டெல்லியில் பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடந்தது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டையும் பலர் முற்றுகையிட்டு போராடினர். இதையடுத்து, பிளஸ்2 பொருளியல் மற்றும் பத்த
2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் ஆகிய இரு பாடங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ இன்று (மார்ச் 28, 2018) அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எஸ்எஸ்எல்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 28 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு, இம்மாதம் 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இன்று (மார்ச் 28, 2018) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வெளியானதாக புகார்கள் எழுந்தன. கையால் எழுதப்பட்ட வினாத்தாள் ஒன்று வாட்ஸ்அப்பில் நேற்று இரவே வெளியானது. அதிலுள்ள பல வ