Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Namakkal

இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
வெண்ணந்தூரில் நாளை நடக்க உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ரொக்கம், வேட்டி, சேலை என வாரி இறைத்த திமுக, இறுதிக்கட்டத்தில் வெள்ளி கொலுசு என்ற பெயரில் இரும்பு கம்பியால் ஆன கொலுசுகளை கொடுத்தது, வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை (அக். 9) நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. 107 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆறாவது வார்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம் நீண்ட காலமாகவே அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட திமுகவுக்கு அதிமுகவைக் காட்டிலும் 1700 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன.   தே
ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, வெண்ணந்தூர் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டு பண பட்டுவாடாவில் ஈடுபட்டது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டமாக அக். 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு சனிக்கிழைமை (அக். 9) தேர்தல் நடக்கிறது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6வது வார்டில் இருந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பி.ஆர்.சுந்தரம், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதையடுத்து அந்தப் பதவிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியாகவும், பாமக, தேமுதிக, அமமுக,
மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

நாமக்கல், முக்கிய செய்திகள்
மல்லசமுத்திரம் அருகே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரை, அவருடைய முன்னாள்  ஊழியர் உள்பட 7 பேர் காரில்  விரட்டிச்சென்று அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (50). திமுக பிரமுகர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர், மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு திமுக கவுன்சிலராக உள்ளார்.   முருகேசன், சொந்த ஊரில் பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். மேலும், தனியார் நிறுவனங்களுக்கு தேவையான வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்தத்தின்பேரில் பணிக்கு அமர்த்தும் மேன்பவர் கன்சல்டசன்சி நிறுவனமும் நடத்தி வருகிறார்.   இவரிடம், மோர்பாளையம் அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர், கார் ஓட்டுநராகவும், மேலாளராகவும் 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்த
ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, ஓலை குடிசையில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை 75 வயது முதியவர் முதல் பிளஸ்-2 மாணவர் வரை 11 பேர் கும்பல் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள சம்பவம், முட்டை மாவட்டத்தை உலுக்கி எடுத்துள்ளது.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வாம்பாள். இவருடைய கணவர், மூட்டைத் தூக்கும் தொழிலாளி. இரு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செல்வாம்பாளுக்கு மூன்று மகள்கள்; இரண்டு மகன்கள். மூத்த மகள் திருமணம் ஆகி, வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்ற இரு மகள்களில் ஒருவர் ரேகா (13); இன்னொரு மகள் ரஞ்சனி (12). (தாயார் மற்றும் மகள்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). செல்வாம்பாள், மல்லூரில் உள்ள தனியார் சேகோ ஆலையில் கூலி வேலை செய்கிறார். தினசரி
‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
''அய்யோ... இப்ப வரைக்கும் எங்களுக்கு அந்த படபடப்பும் பயமும் போகலைங்க. ஈரக்குலையெல்லாம் நடுங்கிப் போச்சுங்க சார். சம்பவம் நடந்து மூணு நாளாச்சு. உங்ககிட்ட பேசும்போதுகூட எங்க முகமெல்லாம் குப்புனு வேர்த்துப் போச்சு பாருங்க...,'' என கொஞ்சமும் பதற்றம் தணியாமல் பேசினர், பாலப்பாளையம் கிராம மக்கள். நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு சாலையில் இருக்கிறது, இந்த கிராமம். பாலப்பாளையம் உப்பிலிய நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன், மதியழகன். திருமணமாகி விட்டது. பெரம்பலூரில் அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இரண்டாவது மகன், கோடீஸ்வரன் (31). எம்.எஸ்சி., பி.எட்., கணிதம் படித்திருக்கிறார். பெற்றோருக்கு எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும், மகன்களை படித்து ஆளாக்கியுள்ளனர்.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சாட்சிகள் விசாரணை ஜன. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!#Gokulraj #Day14

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சாட்சிகள் விசாரணை ஜன. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!#Gokulraj #Day14

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ள நிலையில், சாட்சிகள் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று (5.1.2019) உத்தரவிட்டுள்ளது.   ஆணவப்படுகொலை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று காலை வீட்டில் இருந்து பரமத்தி வேலூரைச் சேர்ந்த தனது நெருக்கமான தோழியான சுவாதியைக் காணச் சென்றிருந்தார். ஆனால் மறுநாள் மாலையில் (24.6.2015ம் தேதி) நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்
“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

அரசியல், இந்தியா, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனையை இன்றைய (நவம்பர் 9, 2017) தினம் சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் உறவுகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைதான் அனைத்து ஊடகங்களிலும் 'பிக் பிரேக்கிங்' சேதி. சசிகலாவின் நேரடி உறவுகளான நடராஜன், திவாகரன், மகாதேவன், சுந்தரவதனம், டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் பிரதான சோதனைக் களங்களாகின. இவற்றுடன் ஜெயா டிவி, டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, கிருஷ்ணபிரியாவின் என்ஜிஓ அலுவலகங்களும் தப்பவில்லை. மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும் வழக்கறிருமான நாமக்கல் செந்தில், கோவை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உதவி