நீ தெய்வம் தந்த அதிசயம்…!
(பனை ஓலை)
சில பாடல்கள்,
சில நிகழ்வுகள் நம்மையும்
அத்துடன் ஒன்றச் செய்துவிடும்.
இளையராஜா, கண்ணதாசன்,
ஜென்சி ஆகியோரின் கூட்டணி
அவர்களின் படைப்புகளுடன்
நம்மை அடிக்கடி ஒன்றிப்
போகச் செய்யும் மாயாஜாலங்களை
அடிக்கடி நிகழ்த்தி இருக்கின்றன.
அந்தக் கூட்டணி எப்போதும்
வெற்றிக் கூட்டணியாக மட்டுமே
அமைந்திருக்கின்றன. அவர்களின்
ராஜாங்கத்தை யாரும் சதி செய்து
கவிழ்த்து விட முடியாது.
எப்போதும் பெரும்பான்மையை
நிரூபித்திருக்கிறார்கள்.
இவர்களின் கைவண்ணத்தில் உருவானதுதான், 'இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன...' என்ற பாடல். படம், நிறம் மாறாத பூக்கள். 1979 ஆகஸ்ட் 31ல் வெளியானது.
பாரதிராஜாவின் நாயகிகள் எப்போதும் வெள்ளை உடை அணிந்த தேவதைகள். இந்தப் பாடலிலும் ராதிகா, வெள்ளுடை தேவதையாக பனிச்சிற்பம்போல் (பனிச்சிற்பம் என வேறு ஒருவரை வர்ணித்து விட்டேன்.