Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: former registrar angamuthu suicide

வாளும் இல்லை கேடயமும் இல்லை… மாணவர்களை போருக்கு அனுப்பும் சேலம் பெரியார் பல்கலை!; சீரழிவின் உச்சத்தில் ‘பிரைடு’!!

வாளும் இல்லை கேடயமும் இல்லை… மாணவர்களை போருக்கு அனுப்பும் சேலம் பெரியார் பல்கலை!; சீரழிவின் உச்சத்தில் ‘பிரைடு’!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்புச்செய்தி -   முன்னாள் பதிவாளர் தற்கொலை, பணி நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல், பேராசிரியர்களுக்குள் அடிதடி என புகார் வளையங்களில் சிக்கி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்விச் சேவையிலும் முற்றிலும் முடங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.   சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என பின்தங்கிய நான்கு மாவட்ட மாணவர்களின் நலனுக்காக இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 2001-2002ம் ஆண்டு முதல் 'பிரைடு' என்ற பெயரில் தொலைதூர கல்விச் சேவையும் தொடங்கப்பட்டது. இதற்காக இந்தியா முழுவதும் தனியாருக்கு படிப்பு மையங்கள் (ஸ்டடி சென்டர்) தொடங்க பெரியார் பல்கலை அனுமதி வழங்கியது. தொலைதூர கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளில் காப்பி அடித்தல்,