Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: DSP Vishnupriya suicide

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழக அளவில் முக்கிய கவனம் பெற்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 30, 2018) தொடங்கியது.   முதல் நாளில் மூன்று சாட்சிகளிடமாவது விசாரணை நடத்தி விடும் திட்டம் இருப்பதாக வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நீதிமன்ற விசாரணையே தாமதமாக பகல் 1.05 மணிக்கு மேல்தான் தொடங்கியது என்பதால், ஒரே ஒரு சாட்சியிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போதுதான் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கின் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்...   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியரின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ம் ஆண