விவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை!
சேலத்தில், காவல்துறை எஸ்ஐ விவசாயியை அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து ஆத்தூர் நீதித்துறை நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம்
வாழப்பாடி அருகே உள்ள
எடப்பட்டி பதூரைச் சேர்ந்தவர்
முருகேசன் (45). விவசாயி.
இவரும், இவருடைய நண்பர்கள்
சிவன்பாபு, ஜெயசங்கர் ஆகியோரும்
மோட்டார் சைக்கிளில்
ஜூன் 22ம் தேதி மாலை,
பெத்தநாயக்கன்பாளையம்
அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி
வனத்துறை சோதனைச்சாவடி
வழியாக சென்றனர்.
அப்போது மூவரும் மது
போதையில் இருந்தனர்.
இந்த சோதனைச்சாவடியில்
வனத்துறை ஊழியர்கள்
மட்டுமின்றி ஏத்தாப்பூர்
காவல்நிலைய சிறப்பு
எஸ்ஐ பெரியசாமி மற்றும்
சில காவலர்களும் வாகனச்
சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
காவல்துறையினர்
அவர்களுடைய வாகனத்தை
சோதனையிட முயன்றபோது,
முருகேசன் அவர்களை
ஆபாச வார்த்தைகளால்
திட்டியுள்ளார். இதனால்
இரு தரப்பு