Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Corona Curfew

இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு என்ற பெயரில் மக்களை வீட்டிற்குள் முடக்கிவிட்டு நடுவண் பாஜக அரசு, நாட்டையே தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டங்களை எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. இது, அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி பலமட்டங்களிலும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, மின் விநியோகம், அணுசக்தி தயாரித்தல், விமான போக்குவரத்து, கனிமச்சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார். இத்தகைய அதிரடியான முடிவுகள் எல்லாமே, தேசிய கட்டமைப்பு மேம்பாடு வரைவுத் திட்டத்திலேயே மறைமுகமாக கோடிட்டு காட்டியிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   தேசிய கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட (National Infrastructure Pipel
சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, சேலம் - சென்னை இடையேயான பயணிகள் வானூர்தி சேவை நாளை (மே 27, புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. பயண நேரத்தில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   ஊரடங்கு:   கொரோனா வைரஸ் பரவல் அபாயம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை நான்கு கட்டங்களாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   நோய்ப்பரவல் அபாயம் மட்டுமின்றி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் பேருந்து, ரயில், வானூர்தி சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொது போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சேலம் காமலாபுரம் வானூர்தி நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த ட்ரூஜெட் வானூர்தி சேவையும் நிறுத்தப்பட்டத