Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: actor Dhanush

சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுமைக்கும் வர்க்க முரண் என்பது, இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையிலான வேறுபாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய பெருநிலத்தைப் பொருத்தவரை வர்க்கப்பிரிவினை என்பதில் சாதிய பாகுபாடும் உள்ளடங்கும். அதிலும் தமிழ்நாடு போன்ற ஆதிகுடிகளின் மண்ணில், வர்க்கப்பிரிவினை என்பது கண்டிப்பாக சாதியத்தையும் இணைத்தே வந்திருக்கின்றன. இப்போதும் இருக்கின்றன. வல்லான் வகுத்ததே நீதி என்ற சூழலில், வலுத்தவர்களிடம் இருந்து எளியவர்கள் எப்படி எல்லாம் தப்பிப்பிழைக்க போராட வேண்டியதிருக்கிறது என்பதை குருதி தெறிக்க பேசி இருக்கிறது, அசுரன். இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அக்.4ல் வெளியாகி இருக்கும் அசுரன் திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்கள் இருத்தலுக்காக கைகொள்ளும் போராட்டங்களை விவரிக்கிறது. படத்தின் மூலக்கதை, பூமணி எழுதிய 'வெக்கை' நாவல்தான் என்பதாலோ என்னவோ படம் முடியும் வரை பார்வையாளர்களின் உடலுக்குள்ள
தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமாக்காரர்களாலும் உலகப்படங்களை எடுக்க முடியும் என்பதற்கான புதிய நம்பிக்கையை தனது 'ஆடுகளம்', 'விசாரணை' படங்களின் வாயிலாக நிரூபித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் இருந்து, மற்றொரு உலகத்தர படமாக வெளிவந்திருக்கிறது, 'வடசென்னை'.   விளிம்புநிலை மக்களின் கதை:   'இது வடசென்னை மக்களின் வாழ்வியல் கதை அல்ல' என்று மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் பயணிக்கிறார் வெற்றிமாறன். ஆனால், படம் நெடுக வடசென்னையில் வசிக்கும் பெரும்பான்மை விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத்தான் வணிகத்தன்மையோடு கொடுத்திருக்கிறார்.   வடசென்னையில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் கடத்தல் என கொடிக்கட்டி பறக்கிறது இரண்டு கோஷ்டி. ஒன்று, குணா (சமுத்திரக்கனி) தலைமையிலான கோஷ்டி. இன்னொன்று, செந்தில் (கிஷோர்) கோஷ்டி. இந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே, கேரம் போர்டு சாம்பியனாவதும், அதன்மூலம
‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க!

‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
எல்லாவற்றிலும் ஸ்மார்ட் ஆக இருக்கும் ஆண்களைக் காட்டிலும், 'சுமார் மூஞ்சி குமார்'களையே பெண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதாம். நம்ம ஊர்ல இல்லைங்க. இது லண்டன் பெண்களின் சமாச்சாரம். இங்கிலாந்தின் லண்டன் பல்கலை., ஒன்று, பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. எத்தனை பேரிடம் இந்த ஆய்வு நடந்தது என்ற தகவல்கள் இல்லை. ஆனால் ஆய்வின் முடிவில், பல்வேறு ருசிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அர்னால்டு ஸ்வஸ்நேகர் போல கட்டுமஸ்தான ஆண்களை, அவ்வளவாக பெண்கள் விரும்புவதில்லை என்பது அந்த ஆய்வில் கிடைத்த முக்கிய தகவல்களில் ஒன்று. அதேபோல், விரல் நுனியில் தகவல்களை வைத்துக்கொண்டு 'டான் டான்' என்று பொளந்து கட்டும் ஆண்கள் மீது மதிப்பு இருக்கிறதே தவிர, அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்பதில் சற்று தயக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 1