Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வழிப்பறி

உத்தம வில்லன்! கெஞ்சிக்கேட்ட இளம்பெண்… திருடிய கைப்பை, செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருப்பிக்கொடுத்த திருடன்!!

உத்தம வில்லன்! கெஞ்சிக்கேட்ட இளம்பெண்… திருடிய கைப்பை, செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருப்பிக்கொடுத்த திருடன்!!

திருச்சி, முக்கிய செய்திகள்
'பெண்ணென்றால் பேயும் இரங்கும்' என்பது எங்கு, யாருக்கு பொருந்திப் போயிருக்கிறதோ இல்லையோ... அந்தப் பழமொழி, திருச்சியில் இளம்பெண் ஒருவருக்கு பலித்திருக்கிறது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் இலஞ்சியம். இவருடைய மகள் கார்குழலி (23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). குஜராத் மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.   சில நாள்களுக்கு முன்பு, எடமலைப்பட்டிபுதூரில் உள்ள தன் தோழியைப் பார்ப்பதற்காக தாயாரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். கிராப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, கிட்டத்தட்ட இருட்ட தொடங்கி இருந்த நேரம் அது.   எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், இலஞ்சியம் கையில் வைத்திருந்த மகளின் கைப்பையை 'லபக்'கென்று பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். &nb