Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நுண்ணுயிரி உரக்கிடங்கு

சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படும் என்பதோடு, 123 ஆண்டுகால பழமையான பள்ளியும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் கூறுகின்றனர்.   சேலம் நகராட்சி, கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. மாநகரில் சேகரமாகும் குப்பைகள் கிச்சிப்பாளையத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே