”சிங்கப்பூரின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புகிறோம்” – கமல் ட்வீட்
நடிகர் கமல்ஹாசன், சிங்கப்பூர் நாட்டின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் அவருடைய கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.
மத்திய, மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். 'மெர்சல்' படத்தின் சில காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்தப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில், திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று சில நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சிங்கப்பூரில் தேசிய கீதம் தினமும் நடுநிசியில் மட்டுமே இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷனில் செயல்ப