Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நடிகர் விவேக்

நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விவேக்: 1961 - 2021 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பால் சனிக்கிழமை (ஏப். 17) அதிகாலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59: நடிகர் விவேக், வெள்ளிக்கிழமை (ஏப். 16) வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுய நினைவின்றி கிடந்த விவேக்கிற்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு ரத்த நாளத்தில் 100 சதவீதம் எல்ஏடி அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்தனர். இந்த சிகிச்சை சுமார் 1 மணி நேரம் நடந்துள்ளது. இதையடுத்து எக்மோ
த்தூ…! ஊடகங்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

த்தூ…! ஊடகங்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 23) செய்தி தொலைக்காட்சிகளை பார்த்தவர்களுக்கு நிரம்பவவே ஆயாச உணர்வை ஏற்படுத்தி இருக்கும். 'இந்த சினிமாகாரனுங்கதான் பொறந்தானுங்களா இந்தியாவுல? நாம்மலாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா...?' என்று கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, சினிமா நடிகர்களைப் பற்றி, அவர் பாணியில் கிண்டலடித்து இருப்பார். ஜூன் 23 அன்று நடிகர் சங்க தேர்தல் செய்திகளை, 'காலை அரும்பி பகலெல்லாம் போதாகி' கணக்காக நேரலை செய்து, மக்களின் கோபத்திற்கு கிட்டத்தட்ட எல்லா தமிழ் செய்தி தொலைக்காட்சிகளுமே ஆளாகி இருந்தன. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரம், தவித்த வாய்க்கு ஒரு மிடறு தண்ணீர்கூட தர இயலாத நிலையில் இருப்பதுதான், நிகழ்காலத் துயரம். கையில் குடங்களுடன் குழாயடிகளில் மைல் நீள வரிசையில் கொதிக்கும் வெயிலில் காத்திருக்கும் தமிழக தாய்மார்கள் ஒருபுறம்; அதேநேரம், டாஸ்மாக் கடைகளில் க
தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற கோரிக்கையுடன் வாட்ஸ் அப்பில் தகவல் வந்தால் போதும். என்ன ஏது என்று கூட முழுவதும் படித்துப் பார்ப்பதில்லை. உடனடியாக அடுத்தடுத்த வாட்ஸ் அப் குழுக்களுக்கு அதை பகிர்ந்துவிட்டுத்தான் மறுவேலை. தமிழன் என்ற உணர்வைக் காட்டிக்கொள்ள அதுவே ஆகச்சிறந்த மற்றும் எளிமையான வழிமுறையாகப் பழகிவிட்டோம். நீங்கள் மட்டுமல்ல. அப்படிச் செய்து வந்தவர்களில் நானும் ஒருவன். பிறகு அப்படி செய்வதில்லை. வெகுசன வாட்ஸ் அப் பயனர்கள், பகிர்வதன் மூலமே தமிழர் என்ற உணர்வில் உச்சி குளிர்ந்து கிடக்கும் சக தோழர்களுக்காக இந்தக் கட்டுரை. கடந்த பதினைந்து நாள்களாக வாட்ஸ் அப்பில், ''தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?'' என்ற தலைப்பிலான ஒரு பதிவு உலா வருகிறது. அந்தப்