Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தேநீர் கடைகள்

சேலத்தில் நாளை முதல் புதிய நேரக்கட்டுப்பாடு அமல்; தேநீர் கடைகள் மூடல்! ஆட்சியர் ராமன் அறிவிப்பு!!

சேலத்தில் நாளை முதல் புதிய நேரக்கட்டுப்பாடு அமல்; தேநீர் கடைகள் மூடல்! ஆட்சியர் ராமன் அறிவிப்பு!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததால், அனைத்து வகையான கடைகளும் நாளை முதல் (ஜூன் 24) மாலை 4 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ராமன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதியின்றி வருகை தந்தவர்கள், தகவல் தெரிவிக்காமலும், எவ்வித பரிசோதனைகளும் செய்து கொள்ளாமல் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   சேலம் மாவட்டத்தில் 35 பேர் மட்டுமே ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 185 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெளி
தேனீர்? தேநீர்? எது சரியானது?

தேனீர்? தேநீர்? எது சரியானது?

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை வழங்கி, 34 வகையான கடைகளைத் திறக்க தமிழக அரசு திங்கள்கிழமை (மே 11) முதல் அனுமதி அளித்திருக்கிறது. அவற்றுள் முக்கியமானது, தேநீர் கடைகள் திறப்பு குறித்தது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம். ஆனால், கடைகளில் நின்று பருக அனுமதி இல்லை. பாத்திரத்தில் வாங்கிச் செல்லலாம். ஒரு கோப்பை தேநீரை ஒவ்வொரு மிடறாக உறிஞ்சி உறிஞ்சி பருகிக்கொண்டே அரசியல் பேசுவது என்பது தமிழர்களுக்கு எப்போதும் அலாதியானது.   ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் 'தேனீர்' கடைகள் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது. இப்போதும் அச்சு ஊடகங்களில் பிழை திருத்தம் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைகளில் தினத்தந்திக்கு தனித்த இடம் உண்டு.
ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

தமிழ்நாடு
கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று முதல் (மே 11) சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் உள்பட பல்வேறு தனிநபர் கடைகளுக்கும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் பின்வரும் கடைகளை இன்றுமுதல் (மே 11) குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதன் விவரம்:   1. தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) 2. பேக்கரி கடைகள் (பார்சல் மட்டும்) 3. உணவகங்கள் (பார்சல் மட்டும்) 4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் 5. கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள் 6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள் 7. மின்சாதனப் பொருள்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் 8. மொபைல்