Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: திருக்குறள்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்! மாணவர்கள் அதிர்ச்சி!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்! மாணவர்கள் அதிர்ச்சி!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் நாள் நடந்த தமிழ் மொழிப்பாடத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 1, 2019) பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 7082 பள்ளிகளைச் சேர்ந்த 861107 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களோடு சேர்த்து மொத்தம் 887992 பேர் இந்த தேர்வை எழுதுவதாக அரசுத்தேர்வுகள்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.   சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 105476 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 40068 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.   பிளஸ்-2 பொதுத்தேர்வு இதுவரை 6 பாடங்களுக்கும் சேர்த்து 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண்
திரை இசையில் வள்ளுவம்: மாசிலா உண்மைக் காதலே…

திரை இசையில் வள்ளுவம்: மாசிலா உண்மைக் காதலே…

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, மகளிர்
#தொடர்   எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவங்களை முக்காலமும் உணர்ந்து கொடுத்ததால்தான் திருக்குறளை, உலகப்பொதுமறை என உயர்வு நவிற்சியோடு சொல்கிறோம். வள்ளுவம் என்பது வாழ்வியல்; குறட்பாக்களை ஏதோ போகிறபோக்கில் எழுதி வைத்துவிட்டுப் போயிருப்பார் என்று சொல்லிவிட முடியாது. திருக்குறளில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்களை, அவற்றை ஆழமாக வாசித்தவர்கள் நன்கு அறிவர். குறிப்பாக, பெண்களின் உணர்வுகளை அதிநுட்பமாக பதிவு செய்திருப்பான் வள்ளுவன். பெண்களிடம் எப்போதும் ஒருவித பாசாங்குத்தனம் இருக்கும். நாடு, மொழி, இனம் கடந்து எந்த ஒரு பெண்ணிடமும் இருக்கும் குணாதிசயங்களில் இத்தகைய போலியான கோபமும் ஒன்று. இதை அவர், 'புலவி நுணுக்கம்' (Feigned anger) எனக்குறிப்பிடுகிறார். இந்த குணம்கூட பெண்கள், தன் தலைவனிடம் செல்லமாக கூடலுக்கு முன் சிறு ஊடல் கொள்வதற்காக மேற்கொள்ளும் கலைதான் என்பது பொய்யாமொழியனின் எண்ணம்.