Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஜோதிகா

நாச்சியார் – சினிமா விமர்சனம்

நாச்சியார் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர் பாலாவிடம் இருந்து சற்றே மாறுபட்ட கோணத்தில், இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் படம், நாச்சியார். காவல்துறை அதிகாரி அவதாரம், ஜி.வி.பிரகாஷின் குப்பத்து பையன் தோற்றம் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நாச்சியார், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பார்க்கலாம். நடிப்பு: ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, 'ராக்லைன்' வெங்கடேஷ் மற்றும் பலர். இசை: இளையராஜா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ் மற்றும் இஓஎன் ஸ்டுடியோஸ் இயக்கம்: பாலா   கதை என்ன? திருமணம் ஆகாத ஒரு மைனர் பெண் கர்ப்பிணி ஆகிறார். சந்தேகத்தின்பேரில் அந்த இளம்பெண்ணின் காதலனை காவல்துறை கைது செய்கிறது. குழந்தை பிறந்த பின்னர்தான் அந்தக் குழந்தைக்கும், கைதான இளைஞனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. எனில், அந்த மைனர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணிய
ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசும் ஒரு சொல், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வசனத்தை 'மியூட்' செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 'பரதேசி', 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை' என்று தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இயக்குநர் பாலா அடுத்து ஜோதிகாவை முதன்மை பாத்திரமாக வைத்து, 'நாச்சியார்' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா - பாலாவின் வழக்கமான கூட்டணி இதிலும் தொடர்கிறது. நாச்சியார் படத்தில் ஜோதிகா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா நேற்று முன்தினம் (நவம்பர் 15, 2017) வெளியிட்டார். ரசிகர்களிடம் பெரிய அளவில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம்தான் இப்போது பெரும் விமர