Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சாதிய வன்மம்.

கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கிருஷ்ணகிரி, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கைப்பிடித்த ஒரே குற்றத்திற்காக பெற்ற மகளென்றும் பாராமல் இளம்பெண்ணின் தலைமுடியை மழித்தும், வயிற்றில் வளர்ந்த ஒன்றரை மாத கருவை உருக்குலைத்தும், அரிவாளால் வெட்டியும் ஓசூர் அருகே கொடூரமாக அரங்கேறி இருக்கிறது சாதி ஆணவக்கொலை.   காவிரி ஆற்றில் சடலம்   கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் வெள்ளியன்று (நவம்பர் 16, 2018) மிதந்து வந்தது. சடலங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருந்தன. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் கிடந்தன. சடலங்களின் கை, கால்கள் வயரால் கட்டப்பட்டிருந்தன.   இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்த வாலிபர்,