Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: குமார் மங்களம் பிர்லா

நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான 'சிவாஜி' படத்தில், ரஜினி அறிமுகம் ஆகும் காட்சி அது. விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, காரில் ஏறும்போது பக்கவாட்டு கண்ணாடியை தட்டியபடி ஒரு பெண் கையில் தட்டேந்தி நிற்பார். அப்போது ரஜினி சொல்வார், ''பணக்காரர் மேலும் பணக்காரர் ஆகிறார். ஏழைகள் மேலும் ஏழைகளாகிட்டே இருக்கிறார்கள் (Rich get Richer and Poor get Poorer)'' என ஆங்கிலத்தில் ஆதங்கத்துடன் கூறுவார். சமீபத்திய ஃபோர்ப்ஸ் இந்தியா (FORBES INDIA) பத்திரிகையின் அறிக்கையும் அந்த வசனத்தைதான் நினைவூட்டுகிறது. உலகளவில் பிரபலமான வணிக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்திய பணக்காரர்களின் பட்டியலை இரு நாள்களுக்கு முன்பு வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலர்கள் (2.47 லட்சம் கோடிகள