10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!
கடந்த வெள்ளியன்று
தேசிய பங்குச்சந்தை (நிப்டி)
10607.35 புள்ளிகளில்
முடிவடைந்துள்ள நிலையில்,
இன்று (ஜூலை 6) மேலும்
60 புள்ளிகள் வரை உயர்க்கூடும்
என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு
தடுப்பு மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான
செய்திகளும் முதலீட்டாளர்களிடம்
உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள
நிலையில், நடப்பு வாரத்தில்
10800 முதல் 11000 புள்ளிகள்
வரை நிப்டி இண்டெக்ஸ்
உயர வாய்ப்புள்ளதாக
பங்குத்தரகு நிறுவனங்கள்
கூறுகின்றன.
தேசிய பங்குச்சந்தையான
நிப்டி - 50, தொடர்ச்சியாக
மூன்றாவது லாபகரமான
வாரத்தை நிறைவு செய்திருந்தது.
ஜூலை 3ம் தேதியன்று
முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை
பீஎஸ்இ மற்றும் எஸ் அன்டு பி
சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம்
வரை உயர்ந்து இருந்தது.
''பொருளாதார தரவுகளை விட,
சந்தைகளின் கள நிலவரங்களின்
யதார்த்தங்கள் பெரும