Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: காமதேனு விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் நல்வாழ்வு அறக்கட்டளை

பருவமழை: சேலத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பின! பார்த்தாலே பரவசம்; எச்சரிக்கையும் தேவை!

பருவமழை: சேலத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பின! பார்த்தாலே பரவசம்; எச்சரிக்கையும் தேவை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் சேலத்தில் மூக்கனேரி, புது ஏரி ஆகியவை முழுமையாக நிரம்பின. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அளவில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாகவே பெய்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பரவலாக அதிகரித்திருக்கிறது. ஏரிகள் உள்ளிட்ட கணிசமான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. டிசம்பர் வரை நமக்கு வடகிழக்குப் பருவமழை பெய்ய இருக்கிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை இவ்விரு பருவமழைக் காலங்களும், இந்த ஆண்டில் பெரிய அளவில் விவசாயிகளுக்கு துணை புரிந்துள்ளது எனலாம்.   சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 105 ஏரிகள் உள்ளன. தவிர, அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழும் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பனைமரத்துப்பட்டி ஏரி உள்ள
இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்!  ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்! ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

கோயம்பத்தூர், முக்கிய செய்திகள்
"இந்த சமுதாயம்தான் நமக்கு எல்லாமே கொடுத்தது; கொடுத்து வருகிறது. நாமும் அதற்குரிய நன்றிக்கடனைச் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம். அதற்காகவே, இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சொந்த செலவில் நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறோம்," என்று தீர்க்கமாக பேசுகிறார் மோகன்ராஜா. கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜா (37). இயற்கை மீதான நேசத்தின் வெளிப்பாடாக, 'காமதேனு' விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் நல்வாழ்வு அறக்கட்டளை'யை நிறுவி, பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களை ஊக்குவிக்க, நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறார். அவருடனான உரையாடலில் இருந்து... "நாட்டுப் பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த அழுத்தம், நீரிழிவு, வாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் நம்மை அண்டாமல் தடுக்க, இயற்கை நமக்கு அளித்த கொடைதான் நாட்டு மாட்டினங்களும் அவை தரும