Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஏழை மாணவர்கள்.

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பரோபகாரம் வெகுவாக அருகிவிட்ட இன்றைய சூழலில், தங்களது உத்தியோகத்தைக் கடந்து, சமூகத்தின் நலன் கருதி செயல்படுதல் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்ற மனோபாவம் பெரிதாக உருவெடுத்திருக்கிறது. அவரவரின் நிதிநிலை ஒன்றே தனிநபர்களின் அளவீடாக கருதும் காலம் மேலோங்கி இருக்கிறது. அதனால் எல்லோருமே பணத்தின் பின்னால் ஓடுவது என்பது கிட்டத்தட்ட காலத்தின் கட்டாயம் என்று தங்களுக்குத் தாங்களே நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமமூர்த்தி என்பவர், தன் சொந்த கிராமத்துப் பிள்ளைகளின் கல்வி நலனுக்காக பள்ளிக்கூடம் கட்ட தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக வழங்கி நாயக அவதாரம் எடுத்திருக்கிறார். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அவ்வையாரோ, 'நட்பும் தகையும் கொடையும் பிறவிக்குணமாம்' என்கிறார். அதுபோ
பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேவை, தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
எதற்கும் உதவாது என வீட்டில் அடைத்து வைத்திருக்கும் பழைய சைக்கிள்களை, பழுது பார்த்து மலைக்கிராம பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர் ஓசூர் இளைஞர்கள். அவர்களின் புதிய முயற்சிக்கு பரவலாக வரவேற்பு கிடைக்கவே, அதை இதர ஏழை மாணவர்களுக்கும் விரிவு படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாட்றாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி. 192 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி அமைவிடம் என்னவோ, சமதளப் பரப்பில்தான் இருக்கிறது. எனினும், பிலிகுண்டு, சிவபுரம், பூமரத்துக்குழி, அட்டப்பள்ளம், பஞ்சல்துணை ஆகிய அடர்ந்த மலைக்கிராமங்களில் இருந்தும் கணிசமான மாணவ, மாணவிகள் வந்து படிக்கின்றனர். மலைப்பகுதி என்பதால் நகர்ப்புறம்போல் அடிக்கடி பேருந்துகளும் செல்லாது. அதனால் மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்தால் பல மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்கின்றனர். மாணவிகளின் நிலை இன்னும் மோசம