Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, கோட்டையில் கொடி நாட்டினாலும், மாங்கனி மாவட்டமான சேலத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கோட்டை விட்டிருப்பது உடன்பிறப்புகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   அதேநேரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் இந்த மண்ணை அதிமுகவின் கோட்டை என நிரூபித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல்களால் திமுகவால் இங்கு ஒரு தொகுதிக்கு மேல் கைப்பற்ற முடியாத சோகம் தொடர்கிறது. கடந்த 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016 தேர்தலில் அதிமுக தனித்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், சேலம் வடக்கில் மட்டும் சூரியன் உதித்து இருந்தது.
பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? திமுக பரப்புரை கூட்டத்தில் ஆனந்த் சீனிவாசன் தகவல்!

பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? திமுக பரப்புரை கூட்டத்தில் ஆனந்த் சீனிவாசன் தகவல்!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
  பெரும் முதலாளிகளுக்கு பாஜக அரசு 1.54 லட்சம் கோடிகளுக்கு வரிச்சலுகை அளித்ததால்தான், பெட்ரோல், டீசல் மீது 20 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டதாகவும், முதலாளிகளின் நலன் கருதியே மத்திய அரசு எரிபொருள் விலையை குறைக்கவில்லை என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறினார்.   ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, ஓமலூர் செட்டிப்பட்டியில் முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் ஒருங்கிணைந்து திங்களன்று இரவு (மார்ச் 22) சிறப்பு பரப்புரை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்ட ஏற்பாடுகளை திமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி லியாகத் அலி செய்திருந்தார்.   காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவ
இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

சேலம், முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் அருகே, பெற்ற மகளை தந்தையே சுத்தியலால் தாக்கிக் கொலை செய்தார். ஊர் மக்கள் கூடியதை அறிந்து அவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள மணியகாரம்பாளையம் ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் கோபால் (54). உள்ளூரில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்று வந்தார். இவருடைய மனைவி மணி. இவர்களுக்கு பிரியா (15) என்ற மகள் இருந்தார். அவர், தாதாபுரம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ்கண்ணன் என்ற மகனும் இருக்கிறார். கோபாலின் மனைவி மணி, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. அடிக்கடி வேலைக்காக வெளியூருக்குச் சென்று விடுவார். மகன் ரமேஷ்கண்ணன், செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரி
கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு நிறுவனங்கள் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் அசல், வட்டி வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   கோரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொது மக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் படி, ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆகிய
சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''கட்சியின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாகவும் மாறுவேன். தவறு செய்தவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள்,'' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். கலைஞர் பாணியிலான அரசியலில் இருந்து சற்றே விலகி, ஜெ., மாடல் அரசியலுக்கு தயாராகி விட்டார் என்பதை, அப்போதே உடன்பிறப்புகள் உணர்ந்திருப்பார்கள். பொதுக்குழுவில் கர்ஜித்தது, இப்போது அடுத்தடுத்து நடந்து வரும் களையெடுப்பு நடவடிக்கைகள் கழக கண்மணிகளை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்குத்து வேலைகளில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு வருகின்றனர்.   முதல்கட்டமாக, சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலுவை கடந்த
கருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா?

கருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்திய அளவில் இன்றைக்கு தமிழகம் கல்வி, தொழில்துறை, விவசாயம் என பல துறைகளிலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பரவலான, நீடித்த வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அதில் திமுகவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமூகநீதி முதல் இன்றைக்கு காவி அரசாங்கம் அமல்படுத்தியுள்ள மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி.   எப்போதும் முன்னோக்கிச் சிந்திக்கக் கூடிய அபார ஆற்றல் வாய்ந்தவர். என்னதான் தமிழ் மொழி, தமிழர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டாலும் திமுக மீதும், கருணாநிதி மீதும் சர்க்காரியா கமிஷன், திருட்டு ரயிலேறி வந்தவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் வரையிலான ஊழல் புகார்கள் அன்று முதல் இன்று வரை சூழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர் வாங்கி வந்த வரம் (?!) அப்படி. திமுக மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. என்றாலும், எதிர்க்கட்சிகளால் திமுகவுக்
மக்களவையில் ‘வாஷ் அவுட்’; உள்ளாட்சி தேர்தலில் ‘நாட் அவுட்’ எடப்பாடி! சறுக்கிய திமுக!!

மக்களவையில் ‘வாஷ் அவுட்’; உள்ளாட்சி தேர்தலில் ‘நாட் அவுட்’ எடப்பாடி! சறுக்கிய திமுக!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த மக்களவை தேர்தலின்போது சொந்த மண்ணில் பதினோரு சட்டமன்றத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்மைய உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிக்குழுக்களை ஒட்டுமொத்தமாக வாரி சுருட்டினார். தமிழக அளவில் அதிக இடங்களில் திமுக முன்னிலை பெற்றிருந்தாலும், சேலம் மாவட்டத்தில் அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.   தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக கடந்த டிசம்பர் 27ம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் ஜன. 2ம் தேதி எண்ணப்பட்டன. நள்ளிரவைக் கடந்தும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை ஜன. 3ம் தேதி பகல் 11 மணியளவில் நிறைவடைந்
இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

சேலம், முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து முக்கிய விழாக்கள் வரிசைகட்டி நிற்கும் வேளையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முடிந்த பின்னரும்கூட இரு மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்கிறார்கள், சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.   சேலம் மாநகராட்சியில் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள், சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. மைய அலுவலகம் மூலம் நான்கு மண்டலங்களின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அலுவலக பராமரிப்பு முதல் ஊழியர்களின் சம்பளம் வரையிலான செலவினங்களுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம், வரி வருவாயையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, மாநகரில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்படும்
பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின்ஸ்டார் சிவக்குமார், செட்டில்மென்ட் கமிஷன் முன்பும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த கமிஷனின் தலைவர், சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.   சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். புதிய பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மற்றும் சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். வீட்டு மனைகளில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, அத்தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு மனை அல்லது ஓராண்டில் முதலீட்டு தொகையை இரட்டிப்பு மடங்காக வழங்கப்படும் என்று செய்தித்தாள்கள், உள்ளூர் சேனல்களில் விளம்பரம் செய்தார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை ந
சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பு, பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை மட்டுமின்றி, பெரிதும் நம்பிக்கொண்டிருந்த கூட்டணி கட்சிகளே சொந்த மண்ணில் எடப்பாடியை திட்டமிட்டு வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.   பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப்பட்டது ஒரு விபத்து என்றாலும், அதன் பிறகு அவரின் ஒட்டுமொத்த கவனமும் கொங்கு மண்டலத்தின் மீதே குவிந்து இருந்தது. மக்களவைக்கு மட்டுமல்ல; ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் நோக்கிலேயே மாதத்தில் இருமுறையாவது அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்து விடுவார். நீரா பானம், அத்திக்கடவு அவினாசி திட்டங்கள் கொண்டு வந்ததும்கூட, அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்துதான். ஆனால், இந்த மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் க