Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: உச்சநீதிமன்றம்

தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் (63), நாடறிந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த வழக்கறிஞர் சாந்தி பூஷணின் மகன்களுள் ஒருவரும்கூட. பொதுநல வழக்குகளில் எப்போதும் ஆர்வம் செலுத்தி வரும் பிரசாந்த் பூஷண், மனதில் பட்டதை அப்பட்டமாகப் பேசிவிடக் கூடியவர். அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பற்றி, கடந்த ஜூன் 27, 2020ல் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில், கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை குறித்தும், பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக செயல்பாட்டாளர்கள் வரவரராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததையும், நீதிபதிகள் அதைக் கண்டிக்காமல் இருப்பதையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார்.
ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
ஆதார் எண் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வங்கிக்கணக்கு, மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடுவண் பாஜக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆதார் அட்டை விநியோகம் மற்றும் ஆதார் எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா இடத்திலும் ஆதார் எண் கட்டாயம் என்றது. வங்கிக் கணக்கு, மொபைல் போன், வருமான வரி, பான் அட்டை மற்றும் சமூக நலத்திட்ட பயன்களைப் பெறுவது வரை ஆதார் எண்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. இதற்காக நடப்பு மார்ச் 31 வரை அவகாசம் அளித்திருந்தது. இதை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து விதமான சேவைகளைப் பெறவும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக காலக்கெடுவை நீட
காவிரி நீர் பங்கீடு:  தமிழகத்திற்கு ஓரவஞ்சனை;  15 டிஎம்சி வெட்டு

காவிரி நீர் பங்கீடு: தமிழகத்திற்கு ஓரவஞ்சனை; 15 டிஎம்சி வெட்டு

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நீர் பங்கீடு வழக்கில், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் ஒதுக்கீட்டு அளவில் இருந்து மேலும் 14.75 டிஎம்சி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு, காவிரியை நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து அதனால் பயனடையும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. முழுமையான வாதப் பிரதிவாதங்கள் எ-டுத்து வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம்.கன்வல்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.
சாதி மறுப்பு திருமணம் செய்தோரை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி

சாதி மறுப்பு திருமணம் செய்தோரை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பிரிக்க பெற்றோர் உள்பட யாருக்கும் உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 16, 2018) அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து என்ற கட்டப்பஞ்சாயத்தின் பேரில் கலப்புத் திருமணம் செய்த காதலர்களை கொடூரமாக தண்டித்தல், கொலை செய்தல் போன்றவைகள் பரவலாக அரங்கேறி வருகின்றன. இதை தடுப்பது குறித்து ஒருவர் தொடர்ந்த பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பில் மேலும் கூறியுள்ளதாவது: சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாரும் அவர்களைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. பெற்றோர்களுக்கும் கூட காத
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது. அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற
ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடு பற்றிய செய்தியில் சிறு சிறு தவறுகள் அல்லது அதை வெளியிடுவதில் அதீத ஆர்வம் இருப்பதை எல்லாம் அவதூறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 9, 2018) கருத்து தெரிவித்துள்ளது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு ஆய்வின்படி, 1992 முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 1252 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. பத்திரிகையாளனின் பேனா முள் தலை சாய்ந்திருக்கும் வரை ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கமோ கண்டுகொள்வதில்லை. அதே பேனா முள் அவர்களை நோக்கி நீளும் ஆயுதமாக மாறும்போதுதான் ஊடகத்தின் மீதோ அல்லது அதை எழுதியவர் மீதோ தாக்குதல் தொடுக்க தொடங்கி விடுகின்றனர். ஆளும் வர்க்கம், அவதூறு வழக்கு என்ற பெயரில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு முடக்கும் வேலைக
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தேசப்பற்றை வளர்க்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா திரையரங்குகளிலும் படம் தொடங்குவதற்கு முன்பு, கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக்கொடி இடம்பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்தன. திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்கள் பலர், தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன.   சில இடங்களில் தேசப்பற்று என்ற பெயரில், தேசிகீதத்தை அவமதிப்பதாகக் கூறி அப்பாவி மக்க