அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்
ஆண்களோ, பெண்களோ
தங்கள் முகத்தை அழகு
படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள்
யாருமே இல்லை. இந்த
உளவியலைப் புரிந்து
கொண்டதால்தான் பல
நுகர்பொருள் நிறுவனங்கள்,
அழகு சாதன பொருட்களை
சந்தையில் அள்ளிக்
கொட்டி வருகின்றன.
இந்தியாவில் மட்டும்
அழகு சாதனப் பொருட்களின்
சந்தை மதிப்பு ரூ.2 லட்சம்
கோடியாக உள்ளது. ஆண்டுதோறும்
20 விழுக்காடு விற்பனை
கூடியும் வருகிறது. ஆனால்
சந்தையில் விற்கப்படும்
சோப் முதல் முகத்திற்குப்
போடும் கிரீம் வரை எதுவும்
நம் முகத்திற்கு நிரந்தர
அழகை தராது; மாறாக வேறு
சில பக்க விளைவுகளை
மட்டுமே உண்டாக்கும்
என எச்சரிக்கிறார், சேலம்
இரண்டாம் அக்ரஹாரத்தில்
உள்ள டாக்டர் ராமு லைப் கேர்
மருத்துவமனை தோல் நோய்
மருத்துவர் மேஜர்.கனகராஜ்.
"அந்தப் பெண்ணிற்கு
சுமார் 22 வயது இருக்கும்.
விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம்.
அந்த நிலையில் அந்தப்பெண்,
ஏதோ ஒரு அழகு
ந