Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்

ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது;  5 நாள்கள் நடக்கிறது

ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது; 5 நாள்கள் நடக்கிறது

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, 'ஏழைகளின் ஊட்டி', 'மலைகளின் அரசன்' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் இரண்டாவது வாரத்திலேயே கோடை விழா நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.     அதன்படி, ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று (மே 12, 2018) தொடங்கியது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.     கோடை விழாவையொட்டி 24 ஆயிரம் கார்னேசன் மலர்கள், பல வண்ண ரோஜாக்கள் உள்பட ஒரு லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக அமைப்பு, சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்க
நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா, கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
ராஜஸ்தானில் செயல்படும் தனியார் கோச்சிங் செண்டர்களும், சிபிஎஸ்இ நிர்வாகமும் சேர்ந்து கொண்டு நீட் தேர்வில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகீர் புகார் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: மனித உரிமை மீறல்: நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. தேர்வு எழுதும் மாணவிகளின் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, பூவை பறிக்கும் கொடூர செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகளைக்கூட கழற்றி சோதனையிட்டுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து தே
இயற்பியல், வேதியியல் கடினம்!; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி

இயற்பியல், வேதியியல் கடினம்!; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி

இந்தியா, கல்வி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
இயற்பியல், வேதியியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சோகத்துடன் கூறினர். பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் போனால், இத்தேர்வை எதிர்கொள்வதே சவாலானதுதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் போட்டித்தேர்வு, நாடு முழுவதும் இன்று (மே 6, 2018) நடந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வு, மதியம் 1 மணி வரை நடந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதேபோல, வினாத்தாள் தாமதாக வந்தது, மொழி மாறி வந்த வினாத்தாள், பதிவெண் மாற்றம் என பல்வேறு குளறுபடிகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. சேலம் மெய்யனூரில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியும் நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மையத
சேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்!

சேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பணி நியமனத்தில் ஊழல், முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை என அடுத்தடுத்து திகில் கிளப்பும் சேலம் பெரியார் பல்கலை, விதிகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமித்ததன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்க துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தன்னிச்சையாக யாதொரு நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அவரின் ஒவ்வொரு செயல்பாடும் பல்கலையில் உள்ள சிண்டிகேட் குழுவின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அந்தளவுக்கு சிண்டிகேட் குழுவுதான், பல்கலைகளைப் பொருத்தவரை ஆகப்பெரிய அதிகார அமைப்பு. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புதல், தொலைதூர படிப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளித்தல், டெண்டர்களை முடிவு செய்தல், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தல், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் என சிண்டிகேட் குழு
‘பீக்குஸ்கோத்தெ’ எனும் வாய்ப்பூட்டு!: “பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சவுராஷ்டிரர்கள்”

‘பீக்குஸ்கோத்தெ’ எனும் வாய்ப்பூட்டு!: “பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சவுராஷ்டிரர்கள்”

கலாச்சாரம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
கடந்த 2016-ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்தில், தாயின் உயிரைக் காப்பாற்ற நாயகன் தெருத்தெருவாக பிச்சை எடுப்பார். சாமியார் ஒருவரின் ஆலோசனையின்பேரில் இப்படி நேர்த்திக்கடன் செலுத்தி, தாயின் உயிரைக் காப்பாற்றுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.   மொழி, கலாச்சார ரீதியாக பாரம்பரியத்தை கட்டிக்காத்து வரும் சவுராஷ்டிரா சமூக மக்களிடையே இப்படி ஒரு சம்பிரதாயம் இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.   குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அவர்கள் குணமடைந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் உள்பட வேண்டுதல் வைத்த அனைவரும் கோயிலில் சென்று வாயில் 'அலகு பூட்டு' குத்திக்கொள்கின்றனர். சிலர், இதை 'வாய்ப்பூட்டு' என்றும் சொல்கின்றனர்.     குறைந்தபட்சம் ஏ
சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதோடு, இறைச்சிக் கழிவுகளால் நிரம்பி இன்னொரு கூவமாக உருமாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சில நாள்களில் நடந்த அனைத்துத்துறை ஆய்வு க்கூட்டத்தில், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1519 பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது கூறினார். குடிமராமத்துப் பணிகள் என்பது, நிலத்தடி நீரை செறிவூட்ட ஆகச்சிறந்த வழிமுறை என்பதால், துவக்க நிலையில் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல ஏரிகள்
சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

ஈரோடு, சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யாதவர்களை எல்லாம் நிர்வாகிகளாக நியமிக்க சதி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. சேலம் பள்ளப்பட்டியில் எஸ்.111, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், கடந்த 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களிடம் இருந்து நிரந்தர இட்டு வைப்புகளை பெறுவதும், அவர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதும் இந்த சங்கத்தின் பணிகளாகும். கூட்டுறவு தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிகளே அனைத்துப் பதவிகளையும் சட்ட விரோதமாக கைப்பற்றுவதுதான் தமிழ்நாட்டில் காலங்க
சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டாலும், அதற்கான பூர்வாங்க தகுதிகளைக்கூட இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை. இன்றும் திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்களுக்குள் எந்த வித பாதுகாப்பு கவசங்களுமின்றி மனிதர்களையே இறக்கிவிடும் அவலம் நீடிக்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என முதன்முதலில் 1993ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. பின்னர் அந்த சட்டத்தில் மேலும் சில விதிகள் சேர்க்கப்பட்டு, 2013ல் புதிய சட்டமும் இயற்றப்பட்டது. ஆனாலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இறக்கும் நிகழ்வுகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளன. இதுபோன்ற மரணங்களில் தமிழகத்தின் பாதிப்பு மட்டுமே 44 சதவீதம் என்கிறது ஓர் ஆய்வு.   கடந்த நான்கு ஆண்டுகளில் மனிதக் கழிவகற்றும் பணிகளில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கி 30 பேர் பலியாகியுள்ளதாக அதிக
சேலம்: ஆர்கானிக் மாம்பழம், சப்போட்டா உற்பத்தியில் அசத்தும் ஷாஜஹான்!; தித்திக்கும் சுவையால் பெருகும் வாடிக்கையாளர்கள்

சேலம்: ஆர்கானிக் மாம்பழம், சப்போட்டா உற்பத்தியில் அசத்தும் ஷாஜஹான்!; தித்திக்கும் சுவையால் பெருகும் வாடிக்கையாளர்கள்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக் கட்டுரை-   முறையான பயிற்சியும், முடியும் என்ற நேர்மறையான சிந்தனையும் இருந்தால் இயற்கை வேளாண்மையில் உறுதியாக சாதிக்க முடியும் என்கிறார் சேலம் ஷாஜஹான். சேலம் கோட்டையைச் சேர்ந்த ஷாஜஹான் (62), எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறார். விவசாயப் பின்னணி ஏதுமில்லை. பல்வேறு சுயதொழில்களைச் செய்து வந்தவர் கடைசியாக, ஆடியோ தொழில் செய்து வந்தார். அந்த தொழில் நன்றாக வளர்ந்த நிலையில், தன் நண்பர்களிடம் விட்டுவிட்டு முழுநேர விவசாயத்திற்கு மாறினார்.   சேலம் மாவட்டம் அடிமலைப்பட்டி கிராமத்தில் போதமலை அடிவாரத்தில் அமைத்திருக்கிறது அவருடைய மாந்தோப்பும் சப்போட்டா தோப்பும். பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அதுவும் வெற்றிகரமாக.   முழுக்க முழுக்க இயற்கையை நேசிக்கும் மனிதராக தென்பட்டார். அவர் பேச்சிலும், நீண்ட நேர உரையாடலிலும
பிளஸ்2 கணித தேர்வு எளிமை;  ஆனால் சென்டம் குறையும்!

பிளஸ்2 கணித தேர்வு எளிமை; ஆனால் சென்டம் குறையும்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இன்று நடந்த பிளஸ்2 கணித பொதுத்தேர்வில் பழைய வினாத்தாளில் இருந்து ஏராளமான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், இந்த தேர்வில் வெகுவாக சென்டம் பெறுவது குறையும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி பிளஸ்2 தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று (மார்ச் 12, 2018) கணித பாடத்தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் கடினமும் அல்ல; அதேநேரத்தில் மிக எளிமை என்றும் சொல்ல முடியாது என்று கலவையான கருத்துகளை கணித ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மூத்த கணித ஆசிரியர் ஒருவர் கூறியது: பத்து மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. 6 மதிப்பெண் பிரிவில் கடைசியாக ஒரு வினா க