Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தகவல்

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

சேலம், தகவல், தமிழ்நாடு
சேலத்தில், நாளை (நவ. 23) நடக்க இருந்த கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள இதர கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை (நவ. 23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (நவ. 24) போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.   தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதோடு, இதற்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டு வந்தது.   இந்நிலையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி நவ. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள் ) நடக்க இருந்த
சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம், தகவல், தமிழ்நாடு
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு அமைப்புகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கான போட்டித்தேர்வு நவ.23, 24 ஆகிய நாள்களில் நடக்கிறது.   சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள், போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு, கடந்த 28.8.2019ம் தேதி (அறிவிக்கை எண்: 02/2019) வெளியிடப்பட்டது. அதேபோல், மத்திய கூட்டுறவு வங்கி தவிர இதர நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களும் மேற்சொன்ன தேர்வு முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பும் மேற்கண்ட தேதியில் (அறிவிக்கை எண்: 01/2019) வெளியிடப்பட்டது. இனசுழற்சி உள்ளிட்ட அனைத்து இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி இப்பணியிடங
டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுதான் அவ்வை வாக்கு. பொருளாதார நெருக்கடிகள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கல்வி நிலையங்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.   அது என்ன திட்டம்? பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.   தகுதிகள் என்னென்ன?:   1. பிளஸ்-2வில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்   2. பிளஸ்-2வை பள்ளியில் சேர்ந்து பயின்றிருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலமோ படித்திர
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
-தகவல்-   பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.   பள்ளி மாணவர்களிடையே அறிவியல், சமூக அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தேசிய திறனாய்வுத்தேர்வு (NTSE - National Talent Search Examination) நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1963ம் ஆண்டு முதல் இத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (NCERT) இத்தேர்வை நடத்தி வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.   இரண்டு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம்
பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப்!

பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப்!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக  மானியக்குழு, நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) முதுநிலை படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது.   இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப்: பெண் கல்வி மற்றும் சிறு குடும்ப கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் வீட்டில் ஒற்றை பெண் குழந்தையாக பிறந்து, பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்காக ஆண்டுதோறும் இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை யுஜிசி செயல்படுத்தி வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் முதலாமாண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள், இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.   இந்த திட்டத்தில் பயனடைய ஒரு முக்கிய நிபந்தனை உண்டு. பெற்றோருக்கு ஒரே மகளாக ப
சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?

சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் ஒருவர், சட்ட விரோதமாக குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதுமே, ஆண், பெண் இருபாலரிடத்திலும் மலட்டுத்தன்மை பிரச்னை அதிகரித்து வருவதுதான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். இதனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளே அதற்கான வழிமுறைகளைச் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளும், விதிமுறைகளும் அதிகம். அதனால்தான் குழந்தையில்லா தம்பதியினரில் பலர் தத்தெடுக்க தயாராக இருந்தாலும், அரசின் கெடுபிடிகள் காரணமாக சட்ட ரீதியான தத்தெடுத்தலை புறக்கணித்து விட்டு, சட்ட விரோதமாக குழந்தையை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனினும், புதிய அகராதி வாசகர்களுக்காக, சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பத
8826 போலீஸ் பணிக்கு ஆளெடுப்பு! எஸ்எஸ்எல்சி போதுமானது!!

8826 போலீஸ் பணிக்கு ஆளெடுப்பு! எஸ்எஸ்எல்சி போதுமானது!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 8826 இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் (டிஎன்யுஎஸ்ஆர்பி), இரண்டாம்நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பாணையை மார்ச் 6, 2019ம் தேதி வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் மாவட்ட / மாநகர ஆயுதப்படைகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக மட்டுமே 2465 இரண்டாம்நிலைக் காவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தவிர, தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் 5962 இரண்டாம்நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத்துறையில் 208 (22 இடங்கள் பெண்களுக்கானவை) இரண்டாம்நிலை சிறைக்காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 191 தீயணைப்பாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 8826 பதவிகளுக்கு போட்டித்தேர்வ
மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவுக்கு பெரியவர்களைக் காட்டிலும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச்செல்வது பதிப்பாளர், புத்தக விற்பனையாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது.   முதன்முதலாக சேலத்தில் ஆண்டுதோறும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே, புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் முயற்சியால், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   21ம் தேதி வரை திருவிழா   சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 9.11.2018ம் தேதி 1வது சேலம் புத்தகத்திருவிழா தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு
இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
இந்தியாவில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட ஒரு புரட்சிபோல உருவெடுத்து உள்ளது. ஆனாலும், மொபைல் போன் சிம் கார்டு பதிவுதாரர்களில் 17.4 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.   நடப்பு ஆண்டில் 31.3.2018ம் தேதி வரையில், இந்தியாவில் 99 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதும், அவர்களில் 17.24 கோடி பெண் சந்தாதாரர்கள் என்றும் இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆய்வு கூறுகிறது.   அதேநேரம், மொத்தம் உள்ள 79.58 ஆண் சந்தாதாரர்களில் 2.50 கோடி சந்தாதாரர்கள் பற்றிய விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறுகிறது.   மொபைல் சந்தாதாரர்களில் நிலவும் பாலின இடைவெளி குறித்து ஒவ்வொரு தொலைதொடர்பு வட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன.   மும்பையில், மொபைல் சந்தாதாரர்களில் 11.85 சதவீதம் பேர் பெண்க
பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் உடல்பருமனால் அவதிப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வளாகத்திலும் இனி நொறுக்குத்தீனிகள் (Junk Food) விற்கக்கூடாது என்று பல்கலை மானியக்குழு (யுஜிசி) அதிரடியாக தடை விதித்து உள்ளது.   இந்தியா எதிர்கொண்டுள்ள உடல்நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகளுள் ஒன்று, உடல்பருமன் (Obesity). 1975ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு உடல்பருமன் பிரச்னை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு நிலவரப்படி 30 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல்பருமனால் அவதிப்படுவதாக கூறுகிறது ஓர் ஆய்வு. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2025ல் இப்பிரச்னைக்கு 70 மில்லியன் பேர் இலக்காகக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த மருத்துவ ஆய்வு. பாட்டிக்கு இருந்த அதே பிரச்னை பேத்திக்கும் இருக்கலாம். அந்த வகையில் இது