Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குற்றம்

ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

இந்தியா, குற்றம், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வங்கிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ.5.78 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் சேகரமாகும் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சில பொதுத்துறை வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ.342.75 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, ரூ.342.75 கோடியை 226 அட்டைப
தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
  சேலம் அருகே, நடந்து முடிந்த தேமுதிக பிரமுகர் படுகொலையின் பின்னணியில் , சமூகத்தை உறைய வைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). விவசாயி. சொந்தமாக டாடா ஏஸ் சரக்கு வாகனமும் ஓட்டி வந்தார். தேமுதிக கட்சியில் சில ஆண்டுகள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (32). இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17, 2018ம் தேதியன்று இரவு 10 மணியளவில் தன் மனைவி ஆலயமணி, மகன்கள் இருவரையும் திருநள்ளாறு கோயிலுக்குச் செல்வதற்காக வாடகை காரில் ஏற்றி, வழியனுப்பி வைத்தார் கலியமூர்த்தி. அடுத்த சில மணி நேரங்களில் தனக்கு நேரப்போகும் விபரீதம் குறித்து அப்போது அவர் சற்றும் அறிந்திருக்கவில்லை.   'எப்போதும்போல வாசலில் படுத்துத்தூங்காமல
முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா?  முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா? முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

அரசியல், ஈரோடு, கிருஷ்ணகிரி, குற்றம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் புகாரில் முக்கிய புள்ளியாகச் சொல்லப்படும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனை தப்ப வைக்கும் நோக்கில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கை இழுத்து மூடும் வேலையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2015 காலக்கட்டத்தில் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அதற்கு முன் இதே பல்கலையில் அவர் உடற்கல்வி இயக்குநராகவும் இருந்தார். அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர்களை நியமிக்க 25 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.     குறிப்பாக, சுவாமிநாதன் பணியில் இருந்த 2014-2017 காலக்கட்டத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 136 பணியிடங்கள் நிரப்பப்
கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
சிறுமி ஆசிஃபாவை கூட்டு வன்புணர்வு செய்து காட்டு மிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கு, இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் பாஜக பிரமுகர், சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆசிஃபா (8). கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி, அந்தப் பகுதியில் இருந்த வனத்திற்குள் குதிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவள் அதன்பின் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தந்தை யூசுப் பூஜ்வாலா, நண்பர்களுடன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மனதளவில் நொந்து போனார். இரு நாள்கள் கழித்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவரை அலட்சியம் செய்து விரட்டி அடித்ததோடு, வழக்குப் பதிவு செய்யவும் மறுத்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி, காட்டுப்பகுதிக்குள் சிறுமியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. அவளுடைய கை, கால் எலும்புகள் முறிக
ஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
டெல்லியில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் கடன் பெற்று, தலைமறைவாகிவிட்ட நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீரவ் மோடி என்ற வைர நகை வியாபாரி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. புகார் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் ரோட்டோமேக் பேனா நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரி, ஆறு பொதுத்துறை வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த மெகா மோசடி வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த மற்றொரு நகை வியாபாரி. டெல
கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை:  மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை: மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

குற்றம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆறு வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த் வழக்கு ஒரு வழியாக இன்று (பிப்ரவரி 19, 2018) முடிவுக்கு வந்திருக்கிறது. சிறுமியை பறிகொடுத்த பெற்றோருக்கு மகளின் கருகிய சடலமே கிடைத்தது. முழுதாகக்கூட கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் செய்துவிட்டு 24 வயதான தஷ்வந்த்தால் ஒரு சராசரி மனிதன் போலவே எப்போதும்போல எந்தவித குற்ற உணர்வும் இல்லாமலேயே நடந்து கொள்ள முடிந்திருக்கிறது. ஊரே சிறுமியை காணாமல் தேடும்போது, தான் மட்டும் அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தால் எப்படி என அப்போது அவன் யோசித்திருக்கக் கூடும். அதனால்தான் அவனே அனகாபுத்தூர் பகுதியில் சிறுமியின் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்து, நல்ல பிள்ளை பெயர் எடுக்க முடிவு செய்திருந்திருக்கிறான். ஆனால், அதுவே அவனுக்கு தூக்குத் தண்டனைய
சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை!; 46 ஆண்டுகள் சிறை!!

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை!; 46 ஆண்டுகள் சிறை!!

குற்றம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில் கொடூரன் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 19, திங்கள் கிழமை) மாலை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அவனுக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: சென்னை குன்றத்தூர் முகலிவாக்கத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாபு. சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களுடைய மகள் ஹாசினி (6). அதே குடியிருப்பைச் சேர்ந்தவர் சேகர் - சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் (24). பொறியியல் பட்டதாரி. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் தஷ்வந்த். அவள் வலியால் துடித்து கூச்சலிட்டாள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டால் என்ன ச
ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11400 மோடி வழக்கின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், அதேபோன்ற மற்றொரு மோசடி வழக்கில் ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரியை சிபிஐ அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 19, 2018) கைது செய்துள்ளனர். பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி மோசடி செய்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், பிரபல பேனா நிறுவனமான ரோட்டோமேக் நிறுவனத் தலைவரான விக்ரம் கோத்தாரியும் நீரவ் மோடி போலவே வங்கிகளின் கடன் பெற்று மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கான்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ரோட்டோமேக் நிறுவனம். அந்த நிறவனத் தல
11400 கோடி ரூபாய் வங்கி கொள்ளை மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அதிர்ச்சி தகவல்கள்

11400 கோடி ரூபாய் வங்கி கொள்ளை மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அதிர்ச்சி தகவல்கள்

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 11400 கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட டாவோஸ் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் பாஜக மேலிடத்தின் ஆசியுடன் இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அய்யத்தை காங்கிரஸ் எழுப்பி இருக்கிறது. யார் இந்த நீரவ் மோடி?: குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் நீரவ் மோடி (46). 'ஃபயர் ஸ்டார் டைமண்ட்' என்ற பெயரில் கச்சா வைரங்களை கொள்முதல் செய்து, அதை ஆபரணங்களாக வடிவமைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருவதுதான் அவருடைய தொழில். இந்தியாவில் டெல்லி, மும்பை, சூரத் ஆகிய இடங்களில் அவருக்கு பங்களாக்கள், நகைக்கடைகள் உள்ளன. தவிர, லண்டன், சிங்கப்பூர், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய் தீவுகள், பெய்ஜிங் ஆகிய இடங்களிலும் கடைகள் உள்ளன. பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணங்களிலேயே நேரத்தை செலவிடுபவர் நீரவ் மோடி.